Saturday 28 June 2014

ஃபித்ராவின் நோக்கம்

அல் - மாஸ் கல்வி மற்றும் பொது நல அறக்கட்டளை, பூந்தோட்டம்.
AL MAAS EDUCATIONAL & SOCIAL WELFARE TRUST, POONTHOTTAM.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும்.  முஸ்லிமான ஆண்கள்,    பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)             நூல்: புகாரி 1503
ஃபித்ராவின் நோக்கம்
இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது.
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)                     நூல் : அபூதாவூத் 137, இப்னுமாஜா 1817

கடந்த ஆண்டு 2013 ரமளான் மாதம் இறுதியில் ஃபித்ரா பணம் மூலம் 35  குடும்பங்களுக்கு                   பெருநாளைக்கு தேவையான பொருள்கள் வாங்கி தந்தோம் இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும்
    செய்ய இருக்கிறோம்.
2013 ஆண்டு  35  குடும்பங்கள், 2014 இந்த வருடம் 70 குடும்பங்கள் செய்ய இருக்கிறோம். ஒரு குடும்பத்திற்க்கு 500 ரூபாய் நிர்ணைத்துள்ளோம்.

P1080085.JPG

ஜீனி -‍‍ 1/2
மைதா -1/2
கோதுமை மாவு - 1/2
பிரியாணி அரிசி -1 கி
எஸ்.வி.எஸ். ஆயில் - 1/2
R.K.G . நெய் - 50
டீ.தூள் - 50
உப்பு - 1 கி
ரவா - 1/2
பிரியாணி மசாலா - 50
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 50
கடுகு - 50
பல்லாரி - 300
மிளகு - 25
ஜீரகம் - 25
சோம்பு - 50
மஞ்சள் தூள் -50
மிளகாய் தூள் - 50
புளி - 100
முந்திரி, திராட்சை, ஏலக்காய்
சேமியா - 1 பாக்கெட்
பால் - 1/2
முட்டை - 10
கோழி - 1/2

Wednesday 24 October 2012

பூந்தோட்டம் மாணவர்கள் நடத்தும் இரத்த தான முகாம்


நம் நாட்டில் ஒவ்வொரு இரண்டு விநாடி காலத்திலும் யாராவது ஒருவருக்கு அவரின் உயிர் காத்திட இரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் இந்தியாவில் 4 கோடி யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பதோ 5 லட்சம் யூனிட்கள் தான். இரத்த தானம் வழங்கிட யாரும் முன்வருவதில்லை என்று இதற்குப் பொருள் அல்ல. பலர் தாங்கள் தானம் வழங்க தயாராய் இருக்கிறோம் என்பதனை மற்றவர்களுக்கு எப்படி அறிவிப்பது என்று தெரியாமல் இருக்கின்றனர்.


Monday 13 August 2012

Quran on Sadaqah


  وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ
63:10உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.